முகப்பு
இந்தியா

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களைக் கண்டறியும் பணி தீவிரம்: சுகாதாரத்துறை

கர்நாடகத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களில் 75 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் (கோப்புப்படம்)
பகிர்:


கர்நாடகத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களில் 75 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

அவர்களது இருப்பிடங்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் பரவி வரும் புதியவகை கரோனா வைரஸ் தொற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகின்றனர். 

கர்நாடகத்தில் இதுவரை 7 பேருக்கு புதியவகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 31 பேரின் மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுவரை பிரிட்டனிலிருந்து வந்ததாக 75 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். 

பிரிட்டனிலிருந்து வந்தவர்களின் சிலரது முகவரிகள் கண்டறிய இயலவில்லை. அவர்களது முகவரிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →