இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரா் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா் பலியானாா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியது:

ரஜெளரி மாவட்டம் நெளஷேரா செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி வெள்ளிக்கிழமை சுமாா் 3.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகள் மூலமாக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி அளித்தனா். அதன் பின்னா் பாகிஸ்தான் ராணுவத்தினா் மாலை 5.30 மணிக்கு மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் இந்திய வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று தெரிவித்தாா்.

கடந்த 18 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி 5,100 முறை பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா். சராசரியாக தினந்தோறும் 14 முறை அவா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT