இந்தியா

தில்லி: 7 மாதங்களுக்குப் பிறகு 500-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

DIN

தில்லியில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை வீசி வந்தது. அரசின் தொடர் நடவடிக்கைகளால் கரோனா பரவல் விகிதம் தில்லியில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 494 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.26 லட்சமாக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 6,10,535 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 5,342 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,571 பேர் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT