ரயில் மோதுவதில் இருந்து நூலிழையில் தப்பிய முதியவர்(விடியோ)
மும்பையில் ரயில் மோதுவதில் இருந்து முதியவர் ஒருவரை அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர் காப்பாற்றினார்.
மும்பையில் ரயில் மோதுவதில் இருந்து முதியவர் ஒருவரை அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர் காப்பாற்றினார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள தாஹிசர் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் நேற்று ரயில்வே தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்ல முயன்றார்.
அப்போது ரயில்வே தண்டவாளத்தில் அவர் தனது காலணியை திடீரென தவறவிட்டுவிட்டார். ஆனால், முதியவர் காலணியை எடுத்து வருவதற்குள் புறநகர் ரயில் வந்துவிட்டது.
உடனடியாக முதியவரின் கையைப் பிடித்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் நடைமேடை இருக்கும் பகுதியை நோக்கி தூக்கிவிட்டார். இதனால் ரயில் மோதுவதில் இருந்து அந்த முதியவர் நூலிழையில் தப்பினார்.