இந்தியா

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பினார் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்

DIN

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்துக்கு கடந்த 18-ஆம் தேதி கரோனா உறுதியானதையடுத்து வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். காய்ச்சல் அதிகமானதைத் தொடர்ந்து அவா் டேராடூன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். 
இதன்பின்னர் கடந்த 28ஆம் தேதி மருத்துவா்களின் ஆலோசனைப்படி அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது கரோனாவிலிருந்து மீண்ட திரிவேந்திர ராவத் இன்று வீடு திரும்பினார். 
தொடர்ந்து அவர் வீட்டிலேயே மேலும் சிலநாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வா் ராவத்தின் மனைவி மற்றும் மகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT