முகப்பு
இந்தியா

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 3-வது நாளாக விமானச் சேவைகள் ரத்து

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதன் காரணமாக மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையான இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 5 ஜனவரி, 2021 at 11:44 AM
Flight operations at Srinagar airport suspended for third consecutive day
பகிர்:

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதன் காரணமாக மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையான இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பனிப்பொழிவு சீரடைந்த பின்னரே விமானங்களை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என விமான நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.

ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதையில் உள்ள பனிப்பொழிவு தற்போது அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். 

Advertisement

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை முழுவதும் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து நிலவி வருவதால் விமான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இந்த பனிப்பொழிவானது தொடர்ந்து புதன்கிழமை காலை வரை மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.