முகப்பு
இந்தியா

ஹைதராபாத்தில் 4-வது நாளாக 100-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

ஹைதராபாத்தில் தொடர்ந்து 4-வது நாளாக 100-க்கும் குறைவான கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 5 ஜனவரி, 2021 at 1:07 PM
ஹைதராபாத்தில் 4-வது நாளாக 100-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு
பகிர்:

ஹைதராபாத்தில் தொடர்ந்து 4-வது நாளாக 100-க்கும் குறைவான கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

கிரேட்டர் ஹைதராபாத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  61 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநில தலைநகரில் ஞாயிறு- 60, சனி- 81, புதிய ஆண்டின் முதல் நாளில் - 72 ஆகவும் பதிவாகியது. 

பொதுச் சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குனரின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 253 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பாதிப்பு நாட்டில் 2,87,993 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் வைரஸால் பலியாகியுள்ளதையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,554 ஆக உள்ளது.

மேலும், ஒரேநாளில் 317 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மீட்பு விகிதம் 97.71 சதவீதமாக உயர்ந்தது. இதுவரை நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,81,400 ஆக உள்ளது. தற்போது 5,039 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.