ம.பி., ஆந்திரத்துக்கு மத்திய அரசு ரூ.1,004 கோடி கூடுதல் நிதி
மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீர்திருத்த நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றிய மத்திய பிரதேசம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1,004 கோடி
இந்தியாம.பி., ஆந்திரத்துக்கு மத்திய அரசு ரூ.1,004 கோடி கூடுதல் நிதி
மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீர்திருத்த நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றிய மத்திய பிரதேசம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1,004 கோடி
புது தில்லி: மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீர்திருத்த நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றிய மத்திய பிரதேசம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1,004 கோடி கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, வரி வருவாய் இழப்பைச் சந்தித்த மாநிலங்களுக்கு தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின்படி சிறப்பு நிதியுதவித் திட்டத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்தாண்டு அறிவித்தார். இந்தத் திட்டத்தின் படி ரூ.14,694 கோடி கடன் பெற அனுமதிக்கப்பட்டதோடு கூடுதலாக மூலதனச் செலவுகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை நான்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்ணயித்தது. இதைப் பல்வேறு மாநிலங்கள் நிறைவேற்றி வருகின்றன. இதில் தற்போது மூன்று மக்கள் மத்திய அரசின் சீர்திருத்தங்களை (ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வரிச் சீர்திருத்தங்கள்) மத்தியப் பிரதேசம், ஆந்திர பிரதேசம் அரசுகள் நிறைவேற்றியுள்ளன.
இதற்காக "மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி' திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேசத்துக்கு ரூ.344 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.660 கோடி என மொத்தம் ரூ.1,004 கோடி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத் துறை புதன்கிழமை முடிவு செய்து அறிவித்துள்ளது.