விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியது
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நாளை 8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து எல்லைகளிலும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
கிழக்கு, மேற்கு தில்லி உள்பட தில்லியின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் பேரணியையொட்டி ஹரியாணாவின் குண்லி, மானேசர், பல்வால் ஆகிய தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிராக்டர் பேரணி நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டிராக்டர் பேரணியை விடியோவாக பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஸான் யூனியன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகத் கூறியதாவது, ''ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினவிழாவில் நடைபெறும் டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணி நடைபெறுகிறது. நாளை மத்திய அரசுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்'' என்று கூறினார்.