திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்
திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், உலகளந்த பெருமாள் ஆலயம், மற்றும் திருப்பாற்கடல் உள்ளிட்ட ஆலயங்களில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சிறப்பு சாமி தரிசன மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும். திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும். திமுக கூட்டணி பலமான கூட்டணி. அனைத்துக் கட்சிகளிடம் கூட்டணி உடன்பாடு முடிந்தவுடன் போட்டியிடும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படும்.
நான் மற்றும் விஜய பிரபாகரன் போட்டியிட அதிக அளவில் தொண்டர்கள் விரும்புகின்றதால் அது குறித்தும் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும். விஜய் குறித்த கேள்விகளுக்கு அவரிடமே பதில் கேளுங்கள் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.