FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ. 10 லட்சம் கோடி கடன்... குறைக்கத் திட்டமே இல்லை!பிரேமலதா விமர்சனம்!

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளது பற்றி..

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:46 pm IST
பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு பட்ஜெட்டில் கடன் சுமை குறைக்கும் எந்த திட்டங்களும் அறிவிப்பு இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

சில திட்டங்கள் ஏற்கனவே இருந்தது. புதிய திட்டங்களும் அறிவித்திருக்கிறார்கள். வாசிக்கப்பட்ட திட்டங்கள் சொல்லாக இல்லாமல் செயலாக வேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் கோரிக்கை.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டின் முக்கியமான பிரச்னை விவசாயக் கடன். முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்தோம். அதை அறிவிக்கப்படவில்லை. வருத்தத்திற்குரிய விஷயம், நீர் மிகை மாநிலமாகத் தமிழ்நாடு உருவாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை

மாவட்டந்தோறும் தொழிற்சாலைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளது, கடன் சுமை குறைக்கும் எந்த திட்டங்களும் அறிவிப்பு இல்லை.

தமிழ்நாட்டில் மின்சாரம் எங்கும் இல்லை. கட்டண உயர்வு ஒரு பக்கம். போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குகிறது. நதிகள் சீரமைப்பு சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கிறோம். தமிழ்நாட்டைக் கடனிலிருந்து மீட்க வேண்டும். கடனில்லா வட்டியில்லா தமிழ்நாடு வர வேண்டும். தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர்கள் கொண்டு வந்த மக்கள் போற்றும் திட்டங்கள் தொடர வேண்டும்.

பெயர் மாற்றம் போதாது.. மக்கள் பயனடைய வேண்டும் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

DMDK General Secretary Premalatha Vijayakanth has criticized the Tamil Nadu budget for not announcing any schemes to reduce the debt burden.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments