தமிழைத் தொடர்ந்து கொங்கணி அகாதெமிக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல்
தமிழ் அகாதெமியைத் தொடர்ந்து கொங்கணி அகாதெமிக்கு தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ் அகாதெமியைத் தொடர்ந்து கொங்கணி அகாதெமிக்கு தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் தலைநகரான தில்லியில் பல்வேறு மொழிகளை மேம்படுத்தும் நோக்கில் தில்லி கலாசாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் தமிழ் மொழி, கலாசாரத்தை வளா்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் தமிழ் அகாதெமி அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கொங்கணி அகாதெமி அமைக்க தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
"கொங்கணி பேசும் அனைத்து மக்களுக்கும், கொங்கணி மொழியை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கொங்கணி மொழியை மேம்படுத்துவதற்காக, தில்லியில் கொங்கணி அகாதெமி அமைக்க தில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது" என்று கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொங்கணி மொழி கோவாவின் அலுவல் மொழி மற்றும் இந்தியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் உள்ள கொங்கணி மக்களால் பேசப்படுகிறது.