மாணவியிடம் அத்துமீறல்: பள்ளி காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
ஹைதராபாத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பள்ளி மாணவியிடம் அதே பள்ளியை சேர்ந்த 30 வயது காவலாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பள்ளியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் முன்று ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.