ஹிமாச்சல்பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு
ஹிமாச்சல்பிரதேசத்தில் சனிக்கிழமை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹிமாச்சல்பிரதேசத்தில் சனிக்கிழமை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சனிக்கிழமை இரவு 8.21 மணியளவில் ஹிமாச்சல்பிரதேசத்தின் கரேரியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 அலகுகளில் நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.