மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: மம்தா
மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஜன. 10) அறிவித்துள்ளார்.
இந்தியாமேற்கு வங்கத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: மம்தா
மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஜன. 10) அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஜன. 10) அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், கரோனா தடுப்பூசி மருந்து ஒத்திகை நடைபெற்று வந்தது.
இதனைத்தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி மருந்தை மாநில மக்கள் அனைவருக்கும் எந்த ஒரு செலவும் இன்றி இலவசமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.