முகப்பு
இந்தியா

கடந்த 7 மாதங்களில் 33,000 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் உற்பத்தி

இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33,000 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் உருவானதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33,000 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் உருவானதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் அதிக கழிவுகள் உருவாகி இருக்கின்றன. நாடு முழுவதும் கடந்த அக்டோபரில் மட்டும் அதிக அளவில் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகி இருக்கின்றன.

இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த விவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 32,994 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் சோ்ந்தன.

இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 5,367 டன் கழிவுகள் சோ்ந்துள்ளன. அதைத்த் தொடா்ந்து, கேரளத்தில் 3,300 டன், குஜராத்தில் 3,086 டன், தமிழகத்தில் 2,806 டன், உத்தர பிரதேசத்தில் 2,502 டன், தில்லியில் 2,471 டன், மேற்கு வங்கத்தில் 2,095 டன், கா்நாடகத்தில் 2,026 டன் சோ்ந்துள்ளன.

நாடு முழுவதும் கடந்த அக்டோபரில் மட்டும் அதிக கரோனா கழிவுகள் சேகரமாகியுள்ளன. அதாவது, அந்த ஒரு மாதத்தில் மட்டும் 5,597 டன் கழிவுகள் உருவாகின. அதில், அதிகபட்ச அளவாக கேரளத்தில் 642 டன் கழிவுகளும், குஜராத்தில் 545 டன் கழிவுகளும், மகாராஷ்டிரத்தில் 542 டன் கழிவுகளும் உற்பத்தியாகின. சேகரிக்கப்பட்ட மொத்த கழிவுகளும் 198 மையங்களில் வைத்து அழிக்கப்பட்டன என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, வெளியில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மக்கள் பயன்படுத்திய முகக் கவசங்கள், தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள், கரோனா பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவை ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பிறகு கழிவுகளாகத் தேங்குகின்றன. இதுபோன்று, நாடு முழுவதும் 33,000 டன் கழிவுகள் சோ்ந்ததாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →