முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இரண்டு சாலை விபத்து: 3 பேர் பலி

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு சாலை விபத்துக்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
Maharashtra: 3 killed in two road accidents in Nagpur
பகிர்:

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு சாலை விபத்துக்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அமராவதி சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு பேருக்கும் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

கலாம்னா பகுதியில் உள்ள சிக்லி சௌக்கில் மற்றொரு விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தில் வந்த 72 வயது முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →