பிரதமர் நரேந்திர மோடி போகி வாழ்த்து
போகி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போகி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர் தைத் திருநாளையொட்டி இன்று தென் மாநிலங்களில் போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் நேரேந்திர மோடியும் போகி பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், இந்த சிறப்பு நாள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் நிரப்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.