கரோனா தொற்று அதிகரித்து காணப்பட்ட கேரளத்திற்கு முதற்கட்ட கரோனா தடுப்பூசி வந்துள்ளது.
விமானம் வழியாக கொச்சி வந்தடைந்த கரோனா தடுப்பு மருந்து வாகனங்கள் வாயிலாக பிரித்து அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக பேசிய எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ், கேரளத்திற்கு 1.8 லட்சம் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் எர்ணாகுளத்திற்காக 73 ஆயிரம் தடுப்பூசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய கரோனா தடுப்பு மருந்துகள் பாலக்காடு, திரிசூர், இடுக்கி, கோட்டயம் ஆகிய பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது என்று கூறினார்.