இந்தியா

நாட்டில் புதிதாக 16,946 பேருக்கு கரோனா உறுதி: மேலும் 198 பேர் பலி

DIN

நாட்டில் புதிதாக 16,946 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 1,05,12,093 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 16,946 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இதனால் மொத்த பாதிப்பு 1,05,12,093 ஆக அதிகரித்தது. அதேவேளையில் நாட்டில் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 198 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,51,727 ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் 17,652 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இன்று காலை நிலவரப்படி நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,13,603 ஆக இருக்கிறது.

மேலும், நேற்று 7,43,191 மாதிரிகள் உள்பட இதுவரை 18.42 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT