மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை மட்டும் 983 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த மாநில அரசு தெரிவித்தது:
"இன்று மொத்தம் 983 பறவைகள் பலியாகியுள்ளன. அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 8 முதல் இதுவரை மொத்தம் 5,151 பறவைகள் பலியாகியுள்ளன."
தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருக்கிறது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.