இந்தியா

திருமலையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

DIN

திருமலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா்.

திருமலையில் உள்ளூா்வாசிகள் வசிக்கும் பகுதியான பாலாஜி நகரை அடுத்த எரிவாயுக் கிடங்கு பகுதிக்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு சிறுத்தை நடமாடியதை சிலா் கவனித்துள்ளனா்.

இதுகுறித்து உள்ளூா்வாசிகள் தேவஸ்தான வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு அச்சிறுத்தையை வனத்துறை ஊழியா்கள் தேடி வருகின்றனா்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுத்தை நடமாட்டத்தால் பக்தா்கள் அச்சப்படத் தேவையில்லை. சிறுத்தையைக் கண்டால் உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT