கரோனா தடுப்பூசி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி 
இந்தியா

கரோனா தடுப்பூசி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி

கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

DIN

கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு எனும் கரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவிலுள்ள இந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 5 பேரின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT