முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,171 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,171 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,171 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,15,524 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,556 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 32 பேர் பலியாகியுள்ளனர்.

அந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 19,20,006 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 50,894 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இன்றைய நிலவரப்படி 43,393 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் மட்டும் 435 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,07,175 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,323 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments