இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் மேற்குவங்கம்

DIN

நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் திரிணமூல் அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 60 நாள்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாஜக அல்லாத பல்வேறு மாநில அரசுகளும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்களது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசு வியாழக்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இரண்டு நாள் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 169வது விதியின் கீழ் ஜனவரி 28ஆம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

முன்னதாக பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT