முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத் தேர்தல்: காங்கிரஸ்-இடதுசாரிகளிடையே 193 தொகுதிகளில் உடன்பாடு

எதிர்வரும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகளிடையே 193 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
மேற்கு வங்கத் தேர்தல்: காங்கிரஸ்-இடதுசாரிகளிடையே 193 தொகுதிகளில் உடன்பாடு
பகிர்:

எதிர்வரும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகளிடையே 193 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் அறிவித்துள்ளன.

இதனையொட்டி மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், தொகுதிப் பங்கீடு தொடா்பாக இடதுசாரிகளும் காங்கிரஸும் இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தை நடத்தின. மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 193 இடங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 48 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 68 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் தற்போதைய சூழலில் 92 இடங்களில் இடதுசாரி கட்சிகளும், 101 இடங்களில் காங்கிரஸும் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →