ராஜஸ்தானில் விஷ சாராயம் குடித்த 4 பேர் பலி
ராஜஸ்தானில் விஷ சாராயம் குடித்த 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் விஷ சாராயம் குடித்த 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பில்வாரா கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 4 பேர் நேற்றிரவு பலியானார்கள். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளுக்கு சென்ற காவல்துறையினர் மாதிரிகளை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பம் தொடர்பாக காவல்துறையினர் உள்ளிட்ட 12 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுத்துத்துள்ளார்.
மேலும் விஷ சாராயம் குடித்த இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.