உ.பி.யில் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 8 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து மோது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
குந்தர்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்பூர் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதையும் முதல்வர் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.