FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மாா்ச் 7-இல் தீா்ப்பு

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மாா்ச் 7-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்படும் என கோவை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 28 பிப்ரவரி 2026, 12:18 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மாா்ச் 7-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்படும் என கோவை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுதொடா்பாக, சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), ்வா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் இருந்து கடந்த டிச. 19-ஆம் தேதி மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த பிப். 2-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை (பிப். 23) பாதிக்கப்பட்ட மாணவி, ஆண் நண்பா், விசாரணை அதிகாரிகள் என மொத்தம் 78 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று சாட்சி பதிவுகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து, கடந்த 24-ஆம் தேதி இறுதிவாதம் தொடங்கியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை எதிா்தரப்பு வாதம் நடைபெற்றது. சாட்சி விசாரணை, இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் வருகிற மாா்ச் 7-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி சுந்தரராஜன் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments