எரிபொருள் விலை உயர்வு: அசாமில் ஆம் ஆத்மி போராட்டம்
பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து அசாம் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து அசாம் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
ராஜஸ்தானில் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இமாசலிலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் அசாம் மாநிலம் குவஹாத்தியில் ஆம் ஆத்மி கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
குவாஹாத்தி பெட்ரோல் நிலையம் முன்பு குவிந்த ஆம் ஆத்மி கட்சியினர் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.