மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,630 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை மட்டும் புதிதாக 2,630 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை மட்டும் புதிதாக 2,630 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,535 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 42 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,23,814 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19,27,335 பேர் குணமடைந்துள்ளனர். 51,042 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 44,199 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
அங்கு குணமடைவோர் விகிதம் 95.23 சதவிகிதம் ஆக உள்ளது. இறப்பு விகிதம் 2.52 சதவிகிதம் ஆக உள்ளது.