இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,585 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,585 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,585 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,26,399 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,670 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,29,005 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் 40 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 51,082 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி இன்னும் 45,071 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 95.19 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.52 சதவிகிதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

SCROLL FOR NEXT