கேரளத்தில் புதிதாக 5,266 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 5,266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 5,266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"மாநிலத்தில் இன்று 5,266 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 4,746 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 407 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
Advertisement
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 71 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் 48,118 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 10.94 சதவிகிதமாக உள்ளது.
இதுவரை மொத்தம் 21 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 3,743 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,730 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,54,206 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 70,983 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்."