முகப்பு
இந்தியா

மேற்குவங்க பேரவையின் துணைத் தலைவராக ஆஷிஷ் பானர்ஜி தேர்வு

மேற்கு வங்க சட்டப்பேரவையின் துணைத் தலைவராக ஆஷிஷ் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

மேற்கு வங்க சட்டப்பேரவையின் துணைத் தலைவராக ஆஷிஷ் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 

கூட்டத்தொடரில் அவையின் துணைத் தலைவராக முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் ஆஷிஷ் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆளுநர் உரை முடிந்தவுடன் பேரவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

சட்டப்பேரவைக் கூட்டமானது வருகிற ஜூலை 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 7 ஆம் தேதி 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →