மேற்கு வங்க சட்டப்பேரவை 
இந்தியா

மேற்குவங்க பேரவை ஆளுநர் உரையுடன் தொடக்கம்: பாஜக வெளிநடப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ஜக்தீப் தன்கா் உரையுடன் தொடங்கியுள்ளது.

ANI

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ஜக்தீப் தன்கா் உரையுடன் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக சட்டப்பேரவைக் கூடியுள்ளது.

இந்நிலையில் ஆளுநரின் உரையின்போது, மேற்கு வங்க தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறை குறித்து பேசும்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்டப்படி வெளிநடப்பு செய்தனர்.

இன்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டமானது, ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 7ஆம் தேதி 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தக் கூட்டத்தொடரில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள், போலி தடுப்பூசி முகாம்கள் குறித்து எதிர்க்கட்சியான பாஜக கேள்வி எழுப்பவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT