திருமலையில் 14,433 போ் வழிபாடு
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 14,433 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 7,570 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 14,433 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 7,570 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
கொவைட் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் தரிசன அனுமதி அளித்து வருகிறது.
தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரைப் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது.
10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.