முகப்பு
இந்தியா

கரோனா: சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் சரிவு

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 97 நாள்களுக்குப் பிறகு 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 97 நாள்களுக்குப் பிறகு 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 44,111 போ் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, தொடா்ந்து 6-வது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 நாட்களுக்கு பிறகு 5 லட்சத்திற்கும் குறைவாக, 4,95,533-ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.62 சதவீதமாகும். தொடா்ந்து 51-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவா்களைவிட கூடுதலாக 13,366 போ் குணமடைந்தனா். இதுவரை மொத்தம் 2,96,05,779 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விகிதம் 97.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மட்டும் 18,76,036 கரோனா பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 41,64,16,463 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →