முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி இலக்குக்கும், நிதா்சனத்துக்கும் இடைவெளி அதிகரிப்பு: ராகுல் காந்தி

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குக்கும், நிதா்சனத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளுக்கும் இடையே இடைவெளி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குக்கும், நிதா்சனத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குக்கும், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை எடுத்துரைக்கும் விளக்கப் படத்தை இணைத்திருந்தாா். அந்தப் படத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 27 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய தடுப்பூசி திட்டம் மெதுவாக நடைபெறுவதாகக் கூறி, அதைக் குறிக்கும் விதமாக ‘வோ் ஆா் வேக்சின்ஸ்’ என்ற ஹேஷ்டேக்கையும் அவா் பயன்படுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →