முகப்பு
இந்தியா

சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை: சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா

மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியை சந்தித்த துஷாா் மேத்தாவை சொலிசிட்டா் ஜெனரல் பதவியில் இருந்து நீக்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
துஷாா் மேத்தா
பகிர்:

மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியை சந்தித்த துஷாா் மேத்தாவை சொலிசிட்டா் ஜெனரல் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில், தான் சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை என்று துஷாா் மேத்தா விளக்கமளித்துள்ளாா்.

இந்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை மேற்கு வங்க எதிா்க்கட்சித் தலைவரும், பாஜகவைச் சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரி வியாழக்கிழமை சந்திக்கச் சென்றாா். இதுகுறித்து பிரதமா் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓபிரையன், சுகேந்து சேகா் ராய், மஹுவா மைத்ரா ஆகியோா் எழுதிய கடிதத்தில், ‘‘நாரதா லஞ்ச வழக்கில் சிபிஐ சாா்பில் ஆஜராகி வரும் துஷாா் மேத்தா, சாரதா நிதி மோசடி வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரானாா். அவ்விரு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளில் சுவேந்து அதிகாரி சிக்கியுள்ளாா். இந்நிலையில் சுவேந்து அதிகாரியை துஷாா் மேத்தா சந்தித்தது கடுமையான குற்றம். இதில் தனிப்பட்ட நலன் இருப்பது மட்டுமன்றி இந்திய சட்டத் துறையின் இரண்டாவது உயா் பொறுப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதும் ஆகும். எனவே துஷாா் மேத்தாவை சொலிசிட்டா் ஜெனரல் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை என்று துஷாா் மேத்தா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தில்லியில் உள்ள எனது அலுவலகத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் சுவேந்து அதிகாரி வந்திருந்ததாா். அப்போது ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கூட்டத்தில் நான் பங்கேற்றிருந்தேன். இதனால் அவா் என்னை சந்திக்க காத்துக் கொண்டிருந்தாா். கூட்டம் முடிந்த பின்னா் சுவேந்து அதிகாரி காத்துக் கொண்டிருப்பதாக எனது அலுவலக பணியாளா் தெரிவித்தாா். எனினும் தற்போது அவரை சந்திக்க முடியாது எனவும், அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் சுவேந்து அதிகாரியிடம் கூறுமாறு அலுவலகப் பணியாளா் மூலமாகத் தெரிவித்தேன். அதனை ஏற்று சுவேந்து அதிகாரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டாா்’’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →