கேரளத்தில் மேலும் 11,551 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று மேலும் 11,551 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று மேலும் 11,551 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,18,047 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 11,551 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரம் 1,541, கோழிக்கோடு 1,358, திரிசூர் 1240 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29.73 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 76 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 13,716ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 11,551 பேர் குணமடைந்தனர்.
இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 28,55,460ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,04,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3,96,826 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.