புதிய அமைச்சரவையில் 4 இடங்கள் வேண்டும்: நிதீஷ் குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்ப அமைச்சர் பொறுப்புகளை ஒதுக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாற்றம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையில் 4 இடங்களை ஐக்கிய ஜனதா தளம் கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்ப அமைச்சர் பொறுப்புகளை ஒதுக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் 40 எம்.பி. தொகுதிகளில் பாஜக 17 தொகுதியிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதில் பாஜக உறுப்பினர்கள் 5 அமைச்சரவை பொறுப்புகளை வகிக்கின்றனர். எனில் 16 இடங்களைக் கைப்பற்றியுள்ள ஐக்கிய ஜனதா தளத்திற்கு 4 அமைச்சரவை பொறுப்புகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.