அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சியினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ளஅண்ணா அறிவாலயத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மாநில தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் வருகை தந்தனர்.
காங்கிரஸுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
summary