இந்தியா

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு

PTI


குவகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியிருந்தது. 

அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக அண்டை மாநிலங்களான மேகாலயம், மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதிகள் மற்றும் வங்கதேசத்தின் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 8.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாம் மாநிலத்தின் கோல்பாரா பகுதியில் அமைந்திருந்ததாகவும், இந்த நிலநடுக்கம் 14 கிலோ மீட்டர் ஆழம் வரை உணரப்பட்டதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி திறந்தவெளிப் பகுதியில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT