கோப்புப்படம் 
இந்தியா

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் ராஜிநாமா உணர்த்தும் செய்தி என்ன? ப. சிதம்பரம்

கரோனா பெருந்தொற்றை கையாண்டதில் மோடி அரசின் தோல்வியே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனின் ராஜிநாமா என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

DIN


கரோனா பெருந்தொற்றை கையாண்டதில் மோடி அரசின் தோல்வியே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனின் ராஜிநாமா என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்பட 12 அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர்.

ஹர்ஷ வர்தன் ராஜிநாமா குறித்து ப. சிதம்பரம் தெரிவித்துள்ளது:

“கரோனா பெருந்தொற்றைக் கையாளுவதில் மோடி அரசு முற்றிலுமாக தோல்வியடைந்ததன் ஒப்புதலே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ராஜிநாமா செய்திருப்பது.

இது மற்ற அமைச்சர்களுக்குமான ஒரு பாடம். ஒரு செயல் சரியாக நடந்தால், அதன் பாராட்டுகள் பிரதமரைச் சாரும். அதுவே தவறாக நடந்தால் அமைச்சர்தான் பலிகடா.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,751 கிலோ தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்: 7 போ் கைது

வாக்கு திருட்டு வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்: தேவேந்தா் யாதவ் உறுதி

நூதன மோசடி: நூஹ் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கைது

போதைப்பொருள் வழக்கில் தென்னாப்பிரிக்க நாட்டவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

மழைவெள்ள நீரில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த ஆம் ஆத்மி குழு!

SCROLL FOR NEXT