முகப்பு
இந்தியா

தில்லி சிபிஐ தலைமையகத்தில் தீ விபத்து

​தில்லி சிபிஐ தலைமையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லி சிபிஐ தலைமையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

காலை 11.35 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வெளியானதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமையகத்திலுள்ள வாகன நிறுத்திமிடத்தில் முதலில் தீ பற்றத் தொடங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்து வெளியான புகைமூட்டத்தைப் பார்த்து ஊழியர்கள் அலுவலகத்தைவிட்டு வெளியேறியதாக நம்பகத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →