இந்தியா

நீதிமன்றத்தில் சாக்குபோக்கு; திருமண நிகழ்ச்சிகளில் ஆட்டம் பாட்டம்.. பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர்

DNS

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஒன்பது ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு, பிரக்யாவுக்கு பிணை வழங்கப்பட்டது. 

இப்படியிருக்க, 2019 பொதுத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட பிரக்யா முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய் சிங்கை தோற்கடித்து நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.

தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்த பிரக்யா, மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை 'தேச பக்தர்' என புகழ்ந்து தள்ளினார். அதுமட்டுமின்றி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி வருகிறார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இதனை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் நரோந்திர சலூஜா, "சக்கர நாற்காலியில் மட்டுமே பார்த்து வந்த பிரக்யாவை இன்று கைப்பந்து மைதானத்தில் மகிழ்ச்சியாக நடனமாடிவருவதை பார்க்கிறோம். நடக்க முடியாத, எழுந்து நிற்கக்கூட அவர் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. அவர் எப்போதும் நல்ல உடல்நிலையுடன் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT