முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 76 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 81,451 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 76 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.09 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. 

ஒருவர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளார். மேலும் 81 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,35,030 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,09,226 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25,012 பேர் பலியாகியுள்ளனர்.

792 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.