உ.பி.யில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதி இடிப்பு!
உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதி இன்று அரசு நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதி இன்று அரசு நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள நைகான் பெகாத்தி கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மசூதி இன்று இடிக்கப்பட்டது.
அங்கு, குளம் மற்றும் சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசி நிலத்தின் மீது மசூதி கட்டப்பட்டிருப்பதாக கிராம சபை அளித்த புகாரின் பேரில் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மசூதியை இடிக்கும் முன்னர் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு காவல்துறையினர் 500 பேர் குவிக்கப்பட்டனர்.
இந்தப் பிரச்னை நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் 18, 2025-ல் வழக்குப் பதியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 6, 2026 அன்று மாவட்ட நீதிமன்றம் மசூதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி இடிக்க உத்தரவிட்டிருந்தது. மேலும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டடத்தை காலி செய்யவும் பொருள்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காலி செய்வதற்கான அவகாசம் முடிந்ததால் மசூதியை இடித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த மசூதியின் மௌலானா அப்துல் ரஹ்மான், இது அரசியல் ரீதியான நடவடிக்கை என்று தெரிவித்தார்.
Mosque on 'pond land' in UP's Sitapur demolished in pre-dawn action
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.