FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தாராவியில் தடுப்பூசி செலுத்தும் பணி: நன்கொடைக்கு வரவேற்பு

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் வரும் 2-3 மாதங்களில் 100% தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூலை 2021, 1:36 pm IST
அடுத்த 2-3 மாதங்களில் தாராவியில் 100% தடுப்பூசி செலுத்தும் பணி
பகிர்:


மும்பை: நாடு முழுவதும் இதுவரை 38 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து முடிந்துள்ள நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் வரும் 2-3 மாதங்களில் 100% தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சிவ சேனை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் ஷேவாலே கூறுகையில், வரும் 2 - 3 மாதங்களில் தாராவில் உள்ள 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் முதல்கட்டமாக 10,000 தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்துள்ளோம். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டமாக 30,000 கரோனா தடுப்பூசிகளை முன்பதிவு செய்யவிருக்கிறோம்.

இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த, நன்கொடையாளர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments