முகப்பு
இந்தியா

ஒரே நாளில் 37 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
பகிர்:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக அனைத்துத் தரப்பினருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் 37,14,441 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 38 கோடியே 76 லட்சத்து 97 ஆயிரத்து 935 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →